×

காளையார்கோவில் அருகே பாலத்தில் கார் மோதி விபத்து குழந்தை உட்பட 2 பேர் பலி 4 பேர் படுகாயம்

காளையார்கோவில், மே 1: காளையார்கோவில் அருேக பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் இஸ்மாயில். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவர் விடுமுறையில் நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். திருச்சி வந்த அவரை காரில் அழைத்து வர இஸ்மாயிலின் மனைவி சபீதா, மகள்கள் நஸ்சரின் பாத்திமா, ஆஷிதா பாத்திமா, உறவினர் ராஜாமுகமது ஆகியோர் சென்றனர். காரை டிரைவர் சோனைசெல்வம் ஓட்டினார்.

இஸ்மாயிலை அழைத்து கொண்டு மீண்டும் பரமக்குடி திரும்பினர். காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் நேற்றுஅதிகாலை 3.30 மணிக்கு வந்த போது சாலையோரம் இருந்த பாலத்தில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் ராஜாமுகமது, சிறுமி நஷ்சரின் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இஸ்மாயில், அவரது மனைவி சபிதா உட்பட 4 பேர் படுகாயமடைந்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Kaliyarikovu ,
× RELATED காளையார்கோவில் அருகே கண்டெடுப்பு: 350...