×

வாழப்பாடியில் மாயமான சிறுவன் பாப்பிரெட்டிப்பட்டியில் மீட்பு

தர்மபுரி, மே 1: வாழப்பாடியில் மாயமான சிறுவன் பாப்பிரெட்டிப்பட்டியில் மீட்கப்பட்டான்.வாழப்பாடி அருகே பேளூர் கரடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயியான இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் ரோகித்சர்மா(11). இவன், பாப்பிரெட்டிப்பட்டி அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, சிறுவன் ேராகித்சர்மா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுவன் ரோகித்சர்மா பாப்பிரெட்டிப்பட்டியில், அவது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஏத்தாப்பூர் போலீசார், அங்கு சென்று ரோகித்சர்மாவை மீட்டு வாழப்பாடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




Tags : resident ,
× RELATED குடியிருப்போர் நல சங்கங்களுக்கு...