×

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, மே 1: சென்னை சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள  அறிக்கை:சென்னையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனிநபர் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குழு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, பளுதூக்குதல், வாள்சண்டை, இறகுப்பந்து, ஜூடோ மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகளிலும், மாணவிகள் தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, பளுதூக்குதல் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுகளிலும் பங்கேற்றிருக்க வேணடும். எனவே, விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்ட தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதிக்கான ஆன்லைன் விண்ணப்பபடிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதில் பதிவிறக்கம் செய்து, நாளை 2ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : hotel ,game ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!