×

மருத்துவமனை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

பாகூர், ஏப். 30:   கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிதேவன்(25). இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமிதேவன் பணியை முடித்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடல் அருகே சென்றபோது, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு கும்பல் நின்று பேசிக்கொண்டிருந்தது.அப்போது, லட்சுமிதேவன் அந்த கும்பலிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர், லட்சுமிதேவனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து லட்சுமிதேவன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் பனங்காடு கிராமத்தை சேர்ந்த முகுந்தன் (22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags : hospital employee ,
× RELATED சினிமாவுக்கு சென்று திரும்பியபோது...