×

ஊட்டி - ேகத்தி இடையே சிறப்பு ரயில் சேவை துவக்கம்

ஊட்டி, ஏப். 28:  சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. கோடை காலம் முடியும் வரை வார இறுதி நாட்களில் ரயில் இயக்கப்படவுள்ளது.  சுற்றுலா பயணிகள் வசதிக்காக தற்போது வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கூடுதலாக நேற்று முதல் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் ஊட்டியில் இருந்து கேத்திக்கு இயக்கப்பட்டது. இதில், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்றனர். இன்றும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். காலை 9.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் ஊட்டியில் இருந்து கேத்திக்கு இயக்கப்படுகிறது

Tags : Ooty ,Wattala ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...