×

11 வது தேசிய சிலம்பாட்ட போட்டிகள் ஈரோட்டில் 4ம் தேதி தொடக்கம்

ஈரோடு, ஏப். 28:
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 11வது தேசிய சிலம்பாட்ட போட்டிகள், ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் வரும் 3ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை, 4 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் 29 மாநிலங்களை சேர்ந்த 400 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தொடக்க விழாவின் போது மலேசிய கலைஞர்களின் சிலம்பாட்டம் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் சிலம்பாட்ட கழகத்தின் அகில இந்திய தலைவர் ராஜேந்திரன்,ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் தேவராஜன், கலெக்டர் கதிரவன், எஸ்.பி. சக்திகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Tags : National Competition Contests ,Erode ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...