×

திருமானூரில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

அரியலூர்,ஏப்.28: திருமானூர் அருகே தாய் திட்டியதால் எலி மருந்தை சாப்பிட்ட கல்லூரி மாணவி  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.திருமானூர் எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் இலக்கியா(18). தஞ்சையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை,கடந்த 20ம் தேதி  இவரது தாய் திட்டியுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த இலக்கியா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இலக்கியாவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...