×

மங்களமேடு துணை மின் நிலையத்தில் புதிய திறன் மின் மாற்றி இன்று மாலைக்குள் சீரான மின்சாரம் கலெக்டர் தகவல்

பெரம்பலூர்,மே5: மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இன்று(5ம் தேதி) மாலைக்குள் சீரான மின்சாரம் வழங்கப்படும்- பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மின் பகிர் மான வட்டம், பெரம்பலூர் கோட்டம் 110 /33 -22 -11 கிலோ வோல்ட் கொண்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில், கடந்த 1ம் தேதி இரவு 8 மணிஅளவில் 16 மெகாவாட் 110/ 11 கிலோ வோல்ட் திறன் மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்விநியோகம் தடை பட்டது. இதனால் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், மங்கள மேடு, வி களத்தூர், எறை யூர், சின்னார் அணை, முருக்கங்குடி, தேவையூர் தம்பை, ராஞ்சன்குடி, சாத்தனவாடி, நகரம், நமையூர் அனுக்கூர் குடிகாடு, அயன் பேரையூர், பெருமத்தூர் ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீரான மின்விநியோகம் தடைபட்டது.

இதனையடுத்து 1ம்தேதி அன்று இரவு 10 மணி அளவில் கழனிவாசலில் உள்ள 33 /11 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மற்றும் 33/ 11 கிலோ வாட் திறன் கொண்ட நன்னை துணைமின் நிலையங்களில் இருந்து மாற்று மின் சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மங்களமேடு துணை மின்நிலையத்தில் பழுதான திறன் மின் மாற்றியை மாற்றம் செய்து புதிய திறன் மின்மாற்றி அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

புதிய திறன் மின்மாற்றி அமைக்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவு பெறும். புதிய திறன் மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் இன்று மாலை முதல் வழங்கப்படும் என்று பொது மக்களுக்கு தெரி வித்துக் கொள்ளப்படுகி றது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post மங்களமேடு துணை மின் நிலையத்தில் புதிய திறன் மின் மாற்றி இன்று மாலைக்குள் சீரான மின்சாரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mangalamedu ,Perambalur ,Karpagam ,Dinakaran ,
× RELATED மங்களமேடு துணை மின் நிலையத்தில்...