×

பாலக்கோடு அருகே சீரான குடிநீர் கேட்டு சாலை மறியல்

பாலக்கோடு, ஏப்.28: பாலக்கோடு அருகே, பஞ்சப்பள்ளியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.  
பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பாலக்கோடு- மாரண்டஅள்ளி சாலையில் பஞ்சப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் காலி குடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் வந்த விஏஓ ராமமூர்த்தி, எஸ்ஐ ராமசாமி ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அ்பபோது, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : balcony ,
× RELATED கொல்கத்தாவில் லார்ட்ஸ் பால்கனி!