×

பிளஸ்2 பொதுத்தேர்வில் கருப்பூர் எஸ்எஸ்ஆர்எம் பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டூர், ஏப்.26:  கருப்பூர் எஸ்எஸ்ஆர்எம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். கருப்பூரில் செயல்பட்டு வரும் எஸ்எஸ்ஆர்எம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் கணித உயிரியல் பிரிவில் படிக்கும் மாணவர் கவுசிக், தமிழ்-98, ஆங்கிலத்தில்- 93, கணிதத்தில்- 100, இயற்பியலில்- 99, வேதியியலில்- 100, உயிரியலில்- 96 என மொத்தம் 600க்கு 586 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். லேகாதேவி என்ற மாணவி 600க்கு 569 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் 2ம் இடமும், மாணவன் தீபக் 600க்கு 565 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடம் பிடித்துள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவியர் 9 பேர் 550க்கு மேலும், 37 பேர் 500க்கு மேலும், 69 பேர் 450க்கு மேலும், 99 பேர் 400க்கு மே லும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியரையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்களை, எஸ்எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தலைவர்கள் பாராட்டினார்.

Tags : school students ,Karupur SSRM ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு