×

₹10 லட்சம் பணம் கேட்டு தராததால் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அதிர்ச்சியில் மனைவி தற்கொலை

தாரமங்கலம், ஏப்.24: தாரமங்கலம் அருகே கணவர் விவாகரத்து ேநாட்டீஸ் அனுப்பியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் சங்ககிரி மெயின்ரோடு தபால்நிலையம் பகுதியை சேர்ந்தவர் கீதாலட்சுமி (54). கணவர் இறந்து விட்டார். இவருக்கு தமிழ்செல்வி (25) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன், தமிழ்செல்வியை அதே பகுதியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டரான வெங்கடேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். வெங்கடேஷ்க்கு ஊதியம் குறைவாக வருவதால், தமிழ்செல்வியிடம் அவரது தாய் வீட்டில் இருந்து ₹10 லட்சம் பணம் வாங்கி வருமாறும், அதனை வைத்து சொந்தமாக தொழில் தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.  இதனால் தமிழ்செல்விக்கும் வெங்கடேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்த தகராறில் தமிழ்செல்வி வெங்கடேஷை விட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்விக்கு, வெங்கடேஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகலறிந்து வந்த ஓமலூர் டிஎஸ்பி சரவணன் தமிழ்செல்வியின் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால், மேட்டூர் ஆர்டிஓ லலிதா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை