உடுமலை,ஏப்.23: உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் உடுமலை வரலாற்று ஆய்வுநடுவம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு எழுத்தாளர் குமாரராசா தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார், நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மறைந்த திரைப்பட இயக்குனர் குறித்து மஞ்சுளா தேவியும், தளி எத்தலப்பமன்னரின் வீரம் குறித்து அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மதியழகன் ஆகியோரும் பேசினர். தொடர்ந்து ஆசிரியர் முனியப்பன், உதவி பேராசியர் காமராஜ் ஆகியோர் அம்பேத்கர் குறித்து பேசினர். சக்திவேல் பாரதி தாசன் குறித்து பேசினார்.நிகழ்ச்சிகளை அருட்செல்வன் தொகுத்து வழங்கினார்.