×

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து அலங்காநல்லூர், உத்தப்புரத்தில் மறியல்

அலங்காநல்லூர்.ஏப்.23: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அலங்காநல்லூர், உத்தப்புரத்தில்  மறியல் நடந்தது.அலங்காநல்லூர் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் நடந்த மறியலில் 50 பெண்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபடமுயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.இதே போல உசிலம்பட்டி - எழுமலை சாலையான உத்தப்புரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் நடைபெற்றது. அவர்களுடன் எழுமலை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியதின் அடிப்படையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் இந்த சாலையில் ஒருமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




Tags : Alankanallur ,incident ,Ponnaravarathi ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை