×

பேரையூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

பேரையூர், ஏப். 23: பேரையூர்தாலுகா, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழப்பட்டி. இந்த கிராமத்தில் பலமாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால் கீழப்பட்டி கிராமமக்கள் பேரையூர் - வத்திராயிருப்பு சாலை கீழப்பட்டி பஸ்நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பேரையூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு ஊராட்சி ஒன்றிய ஆனையாளரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.


Tags : road stops ,Peraiyur ,
× RELATED கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது