×

கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது

பேரையூர், ஏப். 4: பேரையூர் அருகே அப்பக்கரைத் தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகன் மாரிமுத்து(46) பேரையூரிலுள்ள உறவினர் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று பேரையூர் ஹோட்டலில் உணவிற்கு கட்டணம் வசூலிக்கும் இடத்தில் இருந்தபோது, அப்பக்கரை தொட்டியப்பட்டியைச் சேர்ந்த அறிவழகன் மகன் கணபதி (43) என்பவர் பட்டாக்கத்தியைக் காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். இது குறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணபதியைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Baluchami ,Marimuthu ,Peraiur ,Peraiyur Hotel ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது