×

கப்பலூர் டோல்கேட்டில் நடந்த விபத்தில் வாலிபர் பலி

திருமங்கலம், ஏப்.22: திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார்.
திருமங்கலம் சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் மருதுபாண்டி(23). தனியார் நிறுவன ஊழியர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் உச்சப்பட்டியிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு காரில் சென்று ஊர் திரும்பியுள்ளார். அப்போது கப்பலூர் டோல்கேட்டில் முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மருதுபாண்டி ஓட்டி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மருதுபாண்டி மதுரை அரசுமருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் ரோடு மறியல், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags : accident ,taluk ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்