×

அழகர்கோவில் உண்டியலில் ரூ.64 லட்சம்

மதுரை, மே 16: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதன் முடிவில் ரூ.64 லட்சத்து 18 ஆயிரத்து 355 ரொக்கமும், 47 கிராம் தங்கமும், 342 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் திறந்து காணிக்கை கணக்கிடும் பணிகளில் கள்ளழகர் கோயில் துணை ஆணையர் கலைவாணன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அழகர்கோவில் உண்டியலில் ரூ.64 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Ahagargo ,MADURAI ,TALLAKHAGAR ,AHAGARGOV ,Thirukkalyana Hall ,Ahgargo ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...