×

காரிமங்கலம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

காரிமங்கலம், ஏப்.18: காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி-குப்பாங்கரை செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பிரிவில் இருந்து, குப்பாங்கரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு, ஊராட்சி நிதி ₹1 கோடி மதிப்பீட்டில் சுமார் 5கி.மீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தரமாக அமைக்காததால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு ேநரங்களில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Calimangalam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி