×

என்னை வெற்றிபெற செய்தால் மதுராந்தகத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்+

மதுராந்தகம், ஏப். 17: என்னை வெற்றிபெற செய்தால், மதுராந்தகத்தில் பொதுமக்களின் பிரதான கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டதை நிறைவேற்றுவேன் என காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் கூறினார்.காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், நேற்று காலை மதுராந்தகம் நகரில் தேரடி தெரு, வன்னியர் வீதி, பஜார் வீதி, கடப்பேரி, மோச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது.மதுராந்தகத்தில் ஏற்படும் கழிவுநீர் பிரச்னைகளுக்கு முடிவு கட்ட பாதள சாக்கடை திட்டம் கொண்டுவர முதல் கையெழுத்து இடுவேன். மதுராந்தகம் ஏரியை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

உடன், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், திமுக நகர செயலாளர் குமார், முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், சிவலிங்கம் உள்பட பலர் சென்றனர். இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் கொடிகளை ஏந்தியபடி சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...