நாகை, ஏப்.16: தேர்தல், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக 16ம் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 10 மணி முதல் 18ம் தேதி வரை கடகள் அடைக்கப்பட்டிருக்கும். மேலும் வாக்கு எண்ணிக்கையான மே 23ம் தேதி வியாழக்கிழமையன்றும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மூடியிருக்கும் மேலும் பார்கள், மது விற்பனை உரிமம் பெற்றுள்ள ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கும் விடுமுறையாகும். விடுமுறை அறிவிக்கப்பட்ட தேதிகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.