×

சீர்காழியிலிருந்து நாமக்கல்லிற்கு அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

 

சீர்காழி, ஜூன் 12: சீர்காழியில் இருந்து நாமக்கலுக்கு அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரசுக்கு சொந்தமான பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் ஆலோசனையின் பேரில் சேமிப்பு கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து 11 ரயில் பெட்டிகள் மூலம் 1000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நாமக்கல்லிற்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் தர கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post சீர்காழியிலிருந்து நாமக்கல்லிற்கு அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Namakkal ,Tamil Nadu Consumer Goods Trading Corporation ,
× RELATED சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது