×

சிங்களாந்தபுரம் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

சேந்தமங்கலம், ஏப்.16: நாமக்கல் பேளுக்குறிச்சி அடுத்துள்ள சிங்களாந்தபுரம் ஏரியை தூர்வார வலியுறுத்தி தன்னார்வலர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தது. கூட்டத்திற்கு சரவணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு பகுதியில் இருந்து தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்குழுவினர், சிங்களாந்தபுரம் ஏரிக்கு தண்ணீர் வரும் ஈச்சங்காடு, தொப்பம்பட்டி, சேடர்பாளையம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நீர்வழி பாதைகளை பார்வையிட்டனர். மேலும், ஏரியை தூர்வார செய்ய வேண்டிய மராமத்து பணிகள், நீர் ஆதார வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை படத்துடன் பதிவு செய்தனர். ஏரியை தூர்வாரும் பணி விரைவில் நடக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இதில், பழனிவேல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அப்பகுதி இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : lake lake ,Sinhala ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 19பேர் கைது:...