×

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்

தர்மபுரி, ஏப்.16: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், கிடப்பில் கிடக்கும் நீர்பாசன திட்டங்களை  நிறைவேற்ற பாடுபடுவேன் என, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன் கூறினார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அமமுக ேவட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கட்சி நிர்வாகிகள், வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பாளர் ராஜேந்திரன் தெரு தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பி.கோட்டமேடு, குமரிமடுவு, பி.நடூர், பவித்ராநகர், போயர்தெரு, வடசந்தையூர், தென் சந்தையூர், கொட்டாவூர், குப்பனூர், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின் போது, அமமுக வேட்பாளர் ராஜேந்திரன் பேசுகையில், தற்போது வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான, ₹1000 இனி ₹2000 ரூபாயாக உயர்த்தி வழங்க வலியுறுத்துவேன். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், கிடப்பில் கிடக்கும் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே எனக்கு பரிசு பெட்டக சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய ேவண்டும் என்றார்.

Tags : constituency ,Pappirippatti ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...