×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம்: பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கிக் கூற உத்தரவு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கிக் கூற மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீஷன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். மேலும், இந்த வழக்கை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கிக் கூற மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோடநாடு வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்கக்கோரும் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து.கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இந்த மனுவில், கோடநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா உள்ளிட்ட 8 பேரை விசாரிக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என்றும் ஏன் அவர்களை விசாரிக்க வேண்டும் என விரிவான காரணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம்: பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கிக் கூற உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Codanadu ,Palanisamy ,Chennai ,Palanisami ,Kodanadu ,Edapadi ,Codenudu ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...