×

பூதப்பாண்டி அருகே அழகுநிலையம் சென்ற இளம்பெண் மாயம்

நாகர்கோவில், ஏப். 12:  பூதப்பாண்டி அருகே உள்ள தாழக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது மனைவி அருணா (26). இவர் சம்பவத்தன்று கடுக்கரையில் உள்ள தந்தை வீட்டில் இருந்து அழகுநிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அருணாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாவை தேடி வருகிறார்கள்.

Tags : grandparents ,
× RELATED குப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி...