×

கட்டிட மேஸ்திரி மர்மச்சாவு

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஜே.பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி காளியப்பன்(45). இவர், கடந்த 10ம் தேதி நத்தம்காலனி அடுத்த கொட்டாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். இந்நிலையில், கொட்டாவூர் அருகே காளியப்பன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக, அவரது போன் மூலம் உறவினருக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்ற உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த காளியப்பனை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பலனின்றி, காளியப்பன்  நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் ேபாலீஸ் ஸ்டேஷனில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், காளியப்பன் வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் கட்டையால் தாக்கினரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா