×

பாப்பாரப்பட்டி அருகே வாகன தணிக்கையில் ₹1.35 லட்சம் பறிமுதல்

பென்னாகரம், ஏப்.11: பாப்பாரப்பட்டி அருகே, உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ₹1.35 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாப்பாரப்பட்டி அருகே, ேவல்முருகன் தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணம் இன்றி, ₹1.35 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில், மதிகோண்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி மாதையன்(32) என்பது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ₹1.35 லட்சத்தை பறிமுதல் செய்து, பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர். இதே ேபால், பென்னாகரம் அருகே பழையூர் சோதனை சாவடியில், முரளிகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹22 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, பென்னாகரம் உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Paparapatti ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது