×

தமிழகத்தை வஞ்சித்தவர்களுடன் கூட்டணி அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் அமமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம்

திருவாரூர், ஏப்.11: தமிழகத்தை வஞ்சித்தவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவை மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள் என்று திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டிடிவி.தினகரன் பேசினார். திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காமராஜை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைதேர்தல் என்பது ஒரு மினி சட்டமன்றத்திற்கான தேர்தலாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் மோடியா அல்லது லேடியா என்ற நிலையில் அதில் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றி கண்டார். ஆனால் தற்போது பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் மோடிதான் எங்களுக்கு டாடி என்று கூறி கூட்டணி அமைத்துள்ளனர்.இதேபோல் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று தெரிவித்த பாமகவுடனும், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தினை திறக்ககூடாது என்று தெரிவித்த தேமுதிகவுடனும் கூட்டணி அமைத்துள்ளனர்.

மேலும் கஜா புயலின்போது இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு மக்கள் உணவிற்கு தவித்த நிலையில் ஆறுதல் வார்த்தை சொல்வதற்கு கூட வராத மோடி தற்போது ஏதோ டவுன் பஸ்சில் வருவது போன்று அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். இவர்களை மன்னிப்பதற்கு தமிழக மக்கள் ஏமாளிகளா.
இதுபோன்று தமிழகத்தை வஞ்சித்தவர்களுடனும், ஜெயலலிதாவிற்கு எதிரானவர்களுடனும் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை மக்களும்,  அதிமுகவின் உண்மை தொண்டர்களும் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.  உண்மை தொண்டர்கள்  அனைவரும் அமமுகவிடம் உள்ள நிலையில் டெண்டர் பார்ட்டிகள் மட்டுமே பழனிசாமியிடம் இருந்து வருகின்றனர்.எனவே வரும் தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் வெற்றி பெற போவது தற்போது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த பகுதியில் வேட்பாளர் காமராஜ் வெற்றிபெறும் நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிடிவி தினகரன் ேபசினார்.

Tags : TDP ,campaign ,Dinakaran ,candidate ,Kamaraj ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்