×

ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

உசிலம்பட்டி, ஏப்.10: தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் எழுமலை, சேடபட்டி ஒன்றியங்களில் நேற்று வாக்குகள் சேகரித்தார். எழுமலை அருகேயுள்ள ஜோதில்நாயக்கனூர், பள்ளபட்டி, இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம் தெற்குதெரு, எழுமலை தெற்குதெரு, சீல்நாயக்கன்பட்டி, மங்கல்ரேவு, உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, நமது சமுதாய 7 உட்பிரிவிகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கான அரசாணை கண்டிப்பாக வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Tags : Janpandian ,
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு