×

குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே, தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து குண்டல்பட்டி அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சாலையை எதிர்புறமாக கடக்க முடியாதபடி சாலை மூடப்பட்டது. இதனால், தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள் பழைய தர்மபுரி, சவுளுப்பட்டி வழியாக பெங்களூரு நோக்கி சென்றன. இதன் காரணமாக, முத்துப்பட்டி, கொளகத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குண்டல்பட்டி அடுத்த கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே சென்று, தேசிய நெடுஞ்சாலையை கடந்து தர்மபுரி டவுனுக்கு செல்கின்றனர்.

 இதனால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், கடந்த ஆண்டு குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்காக ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம், மல்லிக்குட்டை சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணைய ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் டூவீலர்கள், கார்கள், லாரிகள், பஸ்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். வாகனங்களின் எண்ணிக்கை, பாதசாரிகள் ஆகியவை குறித்த கணக்கெடுப்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி ைவத்தனர். கணக்கெடுத்து ஓராண்டாகியும், குண்டல்பட்டி அருகே மேம்பாலம் கட்டுவது குறித்து அறிவிப்பு கூட வெளியாகவில்லை. எனவே, குண்டல்பட்டியில் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : highway ,National Highway ,Kundalpatti ,
× RELATED சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில்...