×

ஓட்டு கேட்க சென்றபோது கோயிலில் சாமியாடிய அமமுக வேட்பாளர்

சிவகிரி, ஏப்.8 தென்காசி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் தொடக்கமாக சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் நேற்று காலை வழிபாடு செய்தார். அப்போது திடீரென பொன்னுத்தாய்க்கு அருள் வந்து சாமியாடினார். தொடர்ந்து அருள்வாக்கு கூறி கோயில் பூசாரி, கட்சித் தொண்டர்களுக்கு விபூதி பூசி ஆசி வழங்கினார். பின்னர் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்த பொன்னுத்தாய் கோயில் முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அமமுக ஒன்றியச் செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் சுமதிகண்ணன், நகரச் செயலாளர்கள் ராஜ் (வாசு), கோபாலகிருஷ்ணன் (சிவகிரி), அணைத்தலை (ராயகிரி), ஜெ பேரவை மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், மீனவரணி மாவட்டச் செயலாளர் முத்துவேல்சாமி, அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மண்டலப் பொறுப்பாளர் மாரிமுத்துக்குமார், பொறியாளர் அணி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் துரைப்பாண்டி, பரமசிவன், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச்செயலாளர் மணியன்,
ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் மருதுபாண்டியன், இளைஞரணி ஒன்றியச் செயலாளர் புவியரசன், அமைப்பு சாரா ஓட்டுநரணி ஒன்றியச் செயலாளர் மருது பாண்டியன், இலக்கிய அணி ஒன்றியச்செயலாளா; குமார், இளைஞரணி ஒன்றியத் துணைத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Samyiyada Ammukha ,candidate ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்