×

கம்மாபுரம் ஒன்றியம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

காட்டுமன்னார்கோவில், ஏப். 8: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 18ம் தேதி  நடைபெறும் நிலையில் தொகுதிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில்   கம்மாபுரம், கோபாலபுரம், ஆதனூர், பொன்னேரி, மும்முடிச்சோழன், ஓட்டிமேடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை கேட்டார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய அதிமுக செயலாளர் மருது முனுசாமி, அவைத்தலைவர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் சேகர், கனக சிகாமணி, வனிதா, செல்வராஜ், மணிமாறன், பாமக ஒன்றிய செயலாளர் கோதண்டராமன், தேமுதிக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், பாஜக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கம்மாபுரம் ஒன்றிய பகுதியில் அனைத்து அடிப்படை திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிகள் தொடர்பாக பிரசாரத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Tags : AIADMK ,candidate ,union area ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...