×

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தீ

வத்திராயிருப்பு, ஏப். 5: வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் அணை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மாலையில் நேற்று மாலை முதல் புகை வந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு தீ மேலும் பரவி பற்றி எரியத்துவங்கியது. இதனால் வனப்பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது. வனவிலங்குகளும் சிதறி ஓடின. தகவலறிந்த வத்திராயிருப்பு வனத்துறையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Western Ghats ,Winters ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...