×

பெருகவாழ்ந்தானில் தமாகா நிர்வாகிகள் காங்கிரசில் சங்கமம்

மன்னார்குடி, ஏப்ரல். 4;  அதிமுக, பாஜகவுடன் தமாகா கூட்டணி வைத்ததை ஏற்க மறுத்து பெருகவாழ்ந்தானில் ஏராளமான தமாகாவினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.  பாஜக இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணியோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி வைத்து தஞ்சை எம்பி தொகுதியில் போட்டியிடு கிறது. தமாக தலைவர் ஜிகே வாசனின் முடிவை கோட்டூர் ஒன்றியத்தை சேர்ந்த அக்கட்சியினர் ஏற்கவில்லை. மேலும் பல இடங்களில் தமாகாவினர் அக்கட்சியில் இருந்து பல்வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானை சேர்ந்த தமாகா திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பெருகவாழ்ந்தான், புத்தகரம், மாரநகரி தேவதானம், சேந்தமங்கலம், நானலூர் போன்ற ஊர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 53 பேர் தமாகாவில் இருந்து விலகி காங்கிரசில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

 இதற்கான இணைப்பு விழா பெருகவாழ்ந்தான் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் செல்வராஜ், கோட்டம் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமாகா மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் பெருவாழ்ந்தான் சுப்ரமணியன், டாக்டர் சிவகுருநாதன், புத்தகரம் சிதம்பரம், மாரநகரி சரவணன், நாணலூர் மகேஸ்வரன், சேந்தமங்கலம் ரெங்கசாமி, தேவதானம் அந்தோணிசாமி உட்பட 53 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். முன்னதாக பரமசிவம் வரவேற்றார். பொன்னுசாமி நன்றி கூறினார்.


Tags : Thamaga ,administrations ,Congress ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...