×

தியாகிகள் நினைவு தினத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

திருமங்கலம், ஏப்.4: பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் மதுரை புறநகர் மேற்கு அதிமுக சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ ஆகியோர் நினைவு இடத்தில் அஞ்சலி செய்தனர். இவர்களுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், அதிமுக தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில், மாவட்ட செயலாளர் மகேந்திரன், தீபாபாண்டி, புதுராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் தலைமையில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரை தனராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேஷ், மதிமுக, இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Mysore ,party ,
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...