×

சேத்தியாத்தோப்பு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை பிரிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, ஏப்.3: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் (கிழக்கு பிரிவு) இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதற்காக நீண்ட தூரத்திலிருந்து மக்கள் வந்து செல்ல வேண்டியுள்ளது. மும்முடி சோழகன், கத்தாழை, விளக்கப்பாடி, வளையமாதேவி, சின்ன நெற்குணம், பெரிய நெற்குணம், எறும்பூர், மதுவானை மேடு, நெல்லிக்கொல்லை, ஆனைவாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை மேற்கு பகுதியாக பிரித்து வளையமாதேவியில் புதியதாக கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையத்தோடு இணைத்து பிரிவு அலுவலகமாக புதிய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும். இதனால் சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் பொதுமக்களுக்கு துயரம் குறையும். இதே போன்று அடிச்சிக்குடி, வண்டுராயன்பட்டு, கிளாவடி நத்தம், உடையூர், சீயப்பாடி, மஞ்சக்கொல்லை, வத்தராயன் தெத்து, வாண்டையாங்குப்பம் , மிராளூர், கரைமேடு, பின்னலூர், அம்பாள்புரம், ஆகிய கிராமங்களை கிழக்கு பகுதி பிரிவு அலுவலகமாக புதியதாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Assistant Supervisory Officer ,Sethiyathope ,
× RELATED சேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய...