×

சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

மேலூர், ஏப்.3: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மாள் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Prado ,Shivalaya ,
× RELATED கன்னியாகுமரி சிவராத்திரியை ஒட்டி 12...