×

துடியலூர் அருகே பரபரப்பு எஸ்.பி.,யை கண்டித்து நோட்டீஸ்

பெ.நா.பாளையம்,மார்ச்29:கோவை அருகே உள்ள பன்னிமடை திப்பனூரில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு கொலை செய்யப்பட்டு  வீசப்பட்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிறுமி மாயமாகி 3 நாட்களாகியும் போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சம்பவம் நடந்த பன்னிமடை, திப்பனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனை கண்டித்து கம்ப்யூட்டரில் பிரின்ட் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளின் புகலிடமா காவல் நிலையம்,குற்றவாளிகளின் தலைவனாய் எஸ்.பி பாண்டியராஜன்,மக்களை பாதுகாக்காத அரசு, போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளதோடு, நோட்டீசின் கீழ் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Tudialur ,
× RELATED கோவை அருகே வீட்டில் ஏற்பட்ட...