×

நள்ளிரவு கத்தியுடன் சுற்றிய ரவுடிகள் கைது


புதுச்சேரி,  மார்ச் 29: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர்  புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அந்தோணியார் கோவில் சந்திப்பு அருகே  சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில்  அவர்கள் நெல்லித்தோப்பை சேர்ந்த ரிஷி (19) என்பதும், அரியாங்குப்பம்,  புதுகுளம் அஜித் என்ற லோகநாதன் (19) என்பதும், பஸ் நடத்துனர் கொலை வழக்கு  ரவுடிகளான இருவரும் கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து  2 பேரையும் உடனே கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்
படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...