புதுச்சேரி, மார்ச் 29: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அந்தோணியார் கோவில் சந்திப்பு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பை சேர்ந்த ரிஷி (19) என்பதும், அரியாங்குப்பம், புதுகுளம் அஜித் என்ற லோகநாதன் (19) என்பதும், பஸ் நடத்துனர் கொலை வழக்கு ரவுடிகளான இருவரும் கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் உடனே கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்
படுத்தி சிறையில் அடைத்தனர்.