×

மாரண்டஅள்ளி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி

பாலக்கோடு, மார்ச் 28:  மாரண்டஅள்ளி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர். மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவன்(52). இவர் மாரண்டஅள்ளியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். தினமும் பணியை முடித்து விட்டு, மது விற்பனையான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதை தேவன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பணியை முடித்து விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வட்டகானம்பட்டி கூட்டுரோடு அருகே ெசன்ற போது, 2 டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் இரவர், தேவனை வழிமறித்து மது விற்பனை செய்த பணத்தை கொடுக்கும்படி அவரை தாக்கினர்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் அலறிய அவரது சத்தம் கேட்டு, பொதுமக்கள் அங்கு வந்தனர். இதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். சம்பவத்தன்று மது விற்பனை செய்த பணத்தை, தேவன் எடுத்து செல்லாமல் கடையில் வைத்து சென்றதால் பணம் தப்பியது. இதையடுத்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தேவன் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Taskmak ,Moradalli ,
× RELATED தாம்பரத்தில் சட்ட விரோதமாக இயங்கும்...