×

மதுக்கடை ஊழியர் தற்கொலை

புதுச்சேரி,  மார்ச். 28:   புதுவை, குருமாம்பேட், அமைதி நகரை சேர்ந்தவர் தணிகாசலம் (40).  திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் இவர், சமீபகாலமாக வில்லியனூர்  மதுக்கடையில் சப்ளையராக பணியாற்றினார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு  அவரது தாய் இறந்து விட்ட நிலையில், தணிகாசலம் மனவருத்தத்தில்  இருந்துள்ளார். சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்த மயான கொள்ளை  கூத்துநிகழ்ச்சியை பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய அவர், அங்குள்ள  மின் விசிறியில் தாயின் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.  இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...