×

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் சாவு

மானாமதுரை, மார்ச் 27: மானாமதுரை அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி படித்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான். மானாமதுரை அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் கோகுல்நாத்(4). சிவகங்கை அருகே வாணியங்குடியில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வேனில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அருகே வேன் நின்றது. வேனில் இருந்து கோகுல்நாத் இறங்கினார். அப்போது பை கீழே விழுந்துவிட்டது. பையை எடுக்க கோகுல்நாத் குனிந்தபோது, வேன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோடாங்கிபட்டி போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். வேனில் இருந்த உதவியாளர் கோகுல்நாத் இறங்குவதற்கு உதவி செய்யவில்லை. இதனால் விபத்து நடந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். அவர்களை டிஎஸ்பி கார்த்திகேயன் சமரசம் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Elgji ,student ,
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...