×

ஆற்காடு அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஆற்காடு, மார்ச் 26: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி சப்-இன்ஸ்பெக்டர்  தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பூட்டுத்தாக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த லாரியின் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், லாரியை சோதனை செய்ததில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Arcot ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...