×

அரூர்-மஞ்சவாடி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், மார்ச் 22: அரூர் முதல் மஞ்சவாடி வரை செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர்-மஞ்சவாடி சாலை, சென்னை, வேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. பெரிய பள்ளங்கள், குழிகளால் தினந்தோறும் குறைந்தபட்சம் 5 விபத்துகளாவது ஏற்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அரூர்-ஊத்தங்கரை சாலையும் இது போலவே பழுதடைந்து இருந்தது. தற்போது பேட்ச் ஒர்க் மூலம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரூர்-சேலம் சாலை மட்டும் அப்படியே உள்ளது. அரூர் அடுத்த சின்னாங்குப்பத்தில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் உள்ளதற்கான எச்சரிக்கை பலகையில், செடி கொடிகள் சூழ்ந்து பலகையை மறைத்துள்ளது. அதனை நெடுஞ்சாலை துறையினர் அகற்றவில்லை. எனவே, அரூர்-ஊத்தங்கரை சாலையில் பேட்ச் போட்டது போல், அரூர்-சேலம் சாலையையும் சீரமைக்க வேண்டும். சாலையோர எச்சரிக்கை பலகைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Aroor-Manjady ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி