×

ஒகேனக்கல்லில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் மறியல்

பென்னாகரம், மார்ச் 22: ஒகேனக்கல் இந்திரா நகரில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். பென்னாகரம் அருகே, கூத்தப்படி ஊராட்சி, ஒகேனக்கல் இந்திரா நகர் காலனியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளான பெண்கள், நேற்று காலி குடங்களுடன் ஒகேனக்கல்-ஊட்டமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த எஸ்.ஐ. பூபதி மற்றும் போலீசார், அவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், இன்னும் 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி கூறினர். இதனால் மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது