×

காரிமங்கலம் அருகே மலை குன்றில் திடீர் தீ விபத்து

காரிமங்கலம், மார்ச் 12: காரிமங்கலம் அருகே மலை குன்றில் ஏற்பட்ட தீ விபத்தால், ஏற்பட்ட புகை மூட்டத்தால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காரிமங்கலம் அடுத்த கிரிஷ்ணகிரி சாலையில் உள்ள சஞ்சீவராயன் மலையில் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில், காரிமங்கலம் ேபரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு ேலாண்மைத்திட்டத்தின் குடோன் அமைந்துள்ளது. ேபரூராட்சி பணியாளர் தேவையற்ற குப்பைகளை, துப்புரவு பணியாளர்கள் அங்கேயே எரிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் மலைக்குன்றில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட ேநரமாகியும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் இரவு முழுவதும் தீ பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு மக்கள் தூங்க முடியாமல், மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலுக்கு ஆளாகி சிரமப்பட்டனர்.

Tags : fire accident ,hill ,Calimangalam ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...