திருத்துறைப்பூண்டி, மார்ச்12: திருத்துறைப்பூண்டியில் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43-ம் ஆண்டு விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் அரசு தலைமை வகித்தார், துணைத் தலைவர் டாக்டர் ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பாண்டியன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்தர் ஆகியோர் பேசினர்.
விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் இரண்டாம் பெற்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு கோப்பையும் சான்றிதழ்களும், 100 சதவீதம் வருகை பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு அவார்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பள்ளி துணை முதல்வர் ஹெலன்இமாகுலேட் தொகுத்து வழங்கினார். முடிவில் முதல்வர் விமலாகஸ்தூரி நன்றி கூறினார்.