×

தேர்தல் விதிமுறையால் குறைதீர் கூட்டம் ரத்து

புதுக்கோட்டை, மார்ச் 12: இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனே நடைமுறைக்கு வந்து உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதிநாள் கூட்டம் மற்றும் அம்மா திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை நடைபெறாது என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags : meeting ,
× RELATED இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்