பழநி, மார்ச் 8: பழநியில் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழு கூட்டம் நடந்தது. மையத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மினிபஸ்கள் உரிமம் பெற்ற வழித்தடங்களில் செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழுதடைந்துள்ள தகவல் அறியும் தொடுதிரையை சரிசெய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும். பழநி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சின்னராமு நன்றி கூறினார்.