×

முந்தல் மலையடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து பயங்கர விபத்து 7 பேர் படுகாயம்

போடி, மார்ச் 7: கேரளாவிற்கு ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களின் ஜீப் முந்தல் சாலையில் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த நான்கு பேர், போடி புதுகாலனியை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 6 தொழிலாளர்கள் கேரளா மாநிலம் பியல்ராவ் பகுதி ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். டிரைவர் மணிகண்டன் ஜீப்பை ஓட்டிச்சென்றார்.

வேலை முடிந்து ஜீப் முந்தல் மலை அடிவாரம் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜீப் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி மணிகண்டன், முருகேஸ்வரி, ராஜகோபால்,ராஜா, பவுனு, சேகர், தொந்தி படுகாயமடைந்தனர். அவர்களை குரங்கணி போலீசார் மீட்டு போடி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்கு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tags : tunnel ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!